உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:ஏப்., 30ம் தேதிக்குள் சொத்து வரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகையும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்., 31ம் தேதிக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.நேரடியாக வேலை நாட்களில் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகம், குமரன் வணிக வளாகம், தொட்டிபாளையம், முத்தணம்பாளையயம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவே வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். எளிய முறையில் இணையதளம் வழியாக செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை