உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம்

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு துவக்கம்

உடுமலை:பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் பத்தாம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வு துவங்கியது.அதன்படி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலை, 9:00 முதல் 11:00 மணி வரையும், மதியம், 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை இரு வேளைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது.மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் செய்முறைத்தேர்வில் பங்கேற்று வருகின்றனர். அதேநேரம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வரும், 29ம் தேதி வரைபல்வேறு பிரிவுகளாக மாணவ, மாணவியரை பிரித்து செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்