உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஓவியத் திறனை நிரூபித்த மாற்றுத்திறன் மாணவர்கள்

 ஓவியத் திறனை நிரூபித்த மாற்றுத்திறன் மாணவர்கள்

திருப்பூர்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான, மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது; அந்நாளில், மாற்றுத்தினாளிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான இயக்கம் நடத்தப்படுவது வழக்கம். மாணவ, மாணவியரின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும், மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி நேற்று, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அறிவு சார் இயக்க குறைபாடு, வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத குறைபாடு, கை -கால் இயக்க குறைபாடு மற்றும் பார்வை குறைபாடு உள்ள மாணவ, மாணவியர் என, பிரிவினருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக, 10 வயது வரையுள்ள மாணவ, மாணவியர், 11 முதல், 17 வயது வரையுள்ளோர் பிரிவு, 18 வயது என, பிரிவு என, மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரின் ஓவியங்களை, அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்கள் நடுவராக இருந்து தேர்வு செய்தனர். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை