உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

வானுார்: கிளியனுார் அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரி, புதுசாரம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 47; இவர் கடந்த மாதம் 27ம் தேதி இரவு திண்டி வனம் - புதுச்சேரி புறவழிச்சாலையில் தேற்குணம் சந்திப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஹூண்டாய் கார், ஸ்ரீகாந்த் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை