மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
11 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
11 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
11 hour(s) ago
திண்டிவனம், : திண்டிவனம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்தனர்.சென்னையிலிருந்து திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, அரியலுாரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன், 42; ஓட்டினார். குன்னம் பகுதியை சேர்ந்த ஆனைமுத்து, 52; கண்டக்டர் பணியில் இருந்தார்.நேற்று அதிகாலை 2:00 மணியளவில் திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கூட்ரோடு வந்த போது, முன்னால் சென்ற டேங்கர் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், அரசு பஸ், லாரியின் பின்னால் மோதி, நிலை தடுமாறி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.இந்த விபத்தில் கண்டக்டர் ஆனைமுத்து மற்றும் பயணிகள் ஜெயராஜ், 62; புஷ்பராஜ், 54; குமார், 39; ேஷாபா, 29; ராஜகுமாரி, 70; ரவிச்சந்திரன், 43; உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய அரசு பஸ், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago