| ADDED : ஜன 03, 2024 12:13 AM
விக்கிரவாண்டி
எண்ணாயிரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் முன்னாள் துணை ஆளுனர் சரவணகுமார், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தாண்டவமூர்த்தி வரவேற்றார்.போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் 16 பேர் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடந்தது. இறுதியாக ரேவதி, ஹரிபாலா குழு முதலிடத்தையும், ராஜலட்சுமி, சங்கர் குழு இரண்டாமிடத்தையும் வென்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ், கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன் பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். போட்டியில் பங்கு பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.