உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி

இன்ஜினியரிடம் ரூ.80 லட்சம் மோசடி

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்ஜினியரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் என ஆசை காட்டி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் மாங்குடியை சேர்ந்தவர் ஜான் ஸ்டாலின் பிரான்சிஸ் 48. இன்ஜினியர். இவருக்கு ராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் 47, மனைவி வாசுகி 40, அறிமுகமாகி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.80 லட்சத்தை தம்பதியிடம் ஜான் ஸ்டாலின் பிரான்சிஸ் கொடுத்துள்ளார்.தெரிவித்தபடி அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு தாமதித்து ஏமாற்றுவது தெரிந்தது. ராஜபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி