UPDATED : மார் 24, 2024 07:30 AM | ADDED : மார் 24, 2024 07:18 AM
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தரப்பில் இழுபறி நீடிக்கிறது. அதற்கான பின்னணி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு 217 பேர், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு 65 பேர் என, மொத்தம் 280 விருப்ப மனுக்கள் சத்தியமூர்த்தி பவனில் பெறப்பட்டன.அவற்றில் திருவள்ளூருக்கு, 46; திருநெல்வேலிக்கு, 38; கடலுாருக்கு, 34; மயிலாடுதுறைக்கு, 39 மனுக்கள் குவிந்தன. இந்த நான்கு தொகுதிகளை கைப்பற்ற அக்கட்சியினர் மத்தியில், பெரும் போட்டி நிலவுகிறது.விருப்ப மனுக்களை கொண்டு மாநில, 'பரிசீலனை கமிட்டி' தொகுதிக்கு தலா, மூன்று வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலிக்க வேண்டும். அப்படி பரிசீலித்த பட்டியலை, டில்லியில் உள்ள மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.இந்த செய்தியை விரிவாக படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..
https://election.dinamalar.com/index.php