உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்களா?

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்களா?

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., சார்பில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன், முருகானந்தம், ஏசி சண்முகம் ஆகியோர் பின்னடைவை சந்தித்து உள்ளனர். கோவை தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.தமிழகத்தில் இந்த முறை காலூன்றி விட வேண்டும் என பா.ஜ., முனைப்பு காட்டியது. இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேலூர், நெல்லை, கோவையில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். கோவையில் களமிறங்கிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நெல்லையில் களமிறங்கிய நயினார் நாகேந்திரன், திருப்பூரில் முருகானந்தம், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் இவர்கள் அனைவரும் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

கோவையில்,

5வது சுற்று முடிவில்தி.மு.க., ராஜ்குமார் - 1,27,784பா.ஜ., அண்ணாமலை -1,02,784அ.தி.மு.க., ராமச்சந்திரன் -53, 8114வது சுற்று முடிவில்தி.மு.க., ராஜ்குமார் -103484பா.ஜ., அண்ணாமலை-81095அ.தி.மு.க. ராமச்சந்திரன்-42, 7913வது சுற்று முடிவில்தி.மு.க., ராஜ்குமார்- 80,040பா.ஜ.. அண்ணாமலை-61035அ.தி.மு.க., ராமச்சந்திரன் -338832வது சுற்று முடிவில்தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார் - 53580பா.ஜ.,வின் அண்ணாமலை 41167அ.தி.மு.க.,வின் ராமச்சந்திரன் 23396 பெற்றுள்ளனர். கணபதி ராஜ்குமார் 12,413 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நெல்லையில்,

நான்காவது சுற்று முடிவின்படிகாங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 91,708பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் -63,706 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

தென் சென்னை

திமுக.,வின் தமிழச்சி தங்கப்பாண்டியன் -34,065 பா.ஜ.,வின் தமிழிசை சவுந்திரராஜன் 18,806 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.

திருப்பூரில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் 69,559 ஓட்டுகளும்பா.ஜ.,வின் ஏ.பி.முருகானந்தம் -24,305 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

வேலூரில்

தி.மு.க.,வின் கதிர் ஆனந்த் 88,126பா.ஜ.,கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் 59,889 ஓட்டுகள் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆசாமி
ஜூன் 04, 2024 16:59

சாராயம், பணம், லஞ்சம் நிரம்பிய திராவிட மண்ணில் இதெல்லாம் எதிர்பாரக்க முடியாது. வாங்கின 500க்கு விசுவாசமா ஓட்டு போட்டாங்க


Kumar
ஜூன் 04, 2024 15:52

என்னதான் படித்து விட்டு பெரிய பெரிய பதவிக்கு வந்து விட்டாலும் அரசியலில் அரசியல் அனுபவம் தான் எல்லாவற்றிக்கும் பக்குவம் கிடைக்கும் இந்த பக்குவம் இல்லாததினால் தான் தோழமைக் கட்சியான அதிமுகவும் வெளியே வந்து விட்டன கடைசியில் அதுவும் தோற்று நீங்களும் தோற்று இன்று மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாத கொலை கொள்ளை சாராயம் வேலைவாய்ப்பின்மை என பல்வேறு பிரச்சனைகளில் இன்று இருக்கும் ஆளும் கட்சி முன்னிலையில் நிற்கிறது ஒருவேளை கூட்டணி கட்சிகளை அரவணைத்து ஒன்றுபட்டு நின்றிருந்தார் இன்றைக்கு தமிழகமே நிலைமை மாறியிருக்கும் தமிழகத்தில் நிலைமை மாறி இருந்தார் மத்தியில் நிலைமை மாறி இருக்கும் என நான் நினைக்கிறேன்


Oviya Vijay
ஜூன் 04, 2024 15:07

இன்று மாலையில் தமிழக பிஜேபி-யின் அறிக்கை இவ்வாறாக இருக்கக் கூடும்: இந்த தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சியினருக்கும் சகஜம். எங்களுக்கு கிடைத்த இந்த தோல்வியின் காரணங்களைக் கண்டறிய எங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து மீண்டும் மக்கள் பணியை தொடருவோம். எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


Oviya Vijay
ஜூன் 04, 2024 15:01

தமிழகத்தில் இனி பிஜேபி மெல்லச் சாகும்...


N Sasikumar Yadhav
ஜூன் 04, 2024 14:15

கருநாநிதி இந்துக்களை பற்றி உண்மையான தகவலைதான் சொல்லியிருக்கிறார் சோத்தலடித்த பிண்டங்களென. திருட்டு திராவிட சூப வீரபாண்டியனும் உண்மையான தகவலை சொன்னாரு இந்துக்கள் வணங்கும் தெய்வங்களை திட்டினாலும் கோயில்களை இடித்தாலும் ஓசிகள் இலவசங்கள் வாங்கிக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப்பிச்சை போட்டுவிடுவார்கள் இந்துக்கள் என சொன்ன வார்த்தை உண்மை தமிழகம் மறுபடியும் பாராளுமன்ற டோக்கன்களை கொடுத்திருக்கிறார்கள்


Vathsan
ஜூன் 04, 2024 15:56

ஏன் எல்லாரையும் உன்னை மாதிரியே நினைக்கிறேல்ல. இந்த மாதிரி மைண்ட்செட் மாறாத வரைக்கும் அண்ணாமலையே நீ சார்ந்த கட்சியோ ஜெயிக்கப்போறதில்லை. மக்கள் தீர்ப்பை சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்.


Kumar Kumzi
ஜூன் 04, 2024 13:43

இலவசங்களுக்கும் ஓசிகோட்டர் கோழி பிரியாணிக்கு அடிமையான கூமுட்டைங்க தொலைந்து போகட்டும்


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 13:42

நாலு இடங்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி போல அணைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்த அண்ணாமலைக்கு கோவை வெற்றியை கொடுக்காவிட்டாலும் திராவிடக்கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு வித கிலியை கொடுத்துஇருக்கிறார். இன்னும் கொடுப்பார்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 16:04

-////அணைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்த-// பாஸ்கர் சார்... வாயா அது... வாய வெச்சிட்டு, ஒழுங்கா அரசியல் செய்திருந்தாலே போதும்... போனதடவை கரூர்லயே ஜெயிச்சிருக்கலாம்... ரப்பர் வாய வச்சிட்டு, மீடியா, பிரஸ்காரன திட்டுறது... அவனே, இவனே..ன்னு மரியாதை இல்லாம பேசுறது... உடனே டபால்னு கவுத்துட்டு..“தலைவரே”.... ன்னு சொல்றது..ங்ற மாதிரி “அவருடைய வாய்”தான். அத்துடன் உலகத்திலேயே இவர் மட்டும்தான் படிச்சவர் மாதிரி 20000 புத்தகம் படிச்சிருக்கேன்..னு புளுகுறது, வீரசிவாஜி 1967ல காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார்..னு சொல்றதும், இவரோட கட்சி ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பண்றதை பத்தி வாய் தொறக்காம... அடுத்தவன் கட்சிய “பைல்ஸ்”...னு புளுகி வீடியோ வெளியிடுறது... இப்படி வாய்ல வந்ததை அடிச்சுவிட்டா... கோயம்புத்தூர்காரனுங்க வச்சானுங்க ஆப்பு...?


சதிஷ்
ஜூன் 04, 2024 13:41

இரட்டை இலக்க வாக்கு வங்கியினை பி.ஜெ.பி இம்முறை பெற்றுள்ளது. பல இடங்களில் இரண்டாம் இடத்தில் அதன் வேட்பாளர்கள் உள்ளனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மட்டுமே என்று இருந்த நிலை மாறி உள்ளது என்பதையை இத்தேர்தல் காட்டுகின்றது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.


ram
ஜூன் 04, 2024 12:52

விட்டுத்தள்ளுங்க தலைவா.. இதெல்லாம் திருந்தாத கூட்டம் நல்லது கெட்டது தெரியாத கூட்டம்... பட்டும் திருந்தாத கூட்டம்.. முதன் மூறையே வெற்றி என்பது கடினமான செயலே.. அடுத்தமுறை நிச்சயம் மாறும் .. மாற்றுவோம்..


கனோஜ் ஆங்ரே
ஜூன் 04, 2024 15:47

-//அடுத்தமுறை நிச்சயம் மாறும் .. மாற்றுவோம்..-// இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே ரணக்களம் ஆக்கிட்டீங்களே, அண்ணாமலைய... ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் கரூர்..ல வாங்குன அடிய தாங்க முடியாம, செந்தில்பாலாஜிய சீண்டுனாரு...? செந்தில்பாலாஜி இல்லென்னு நினைப்புல கோவை..ல நின்னாரு... இப்ப... பாரு.... கரூர்காரனுங்க மொத்தமா வச்சி செஞ்சிட்டானுங்க...?


தமிழ்
ஜூன் 04, 2024 12:44

???


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை