உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருடன் கூட்டணி என அறிவிக்காமல் முடிந்துபோன பாமக பொதுக்குழு கூட்டம்

யாருடன் கூட்டணி என அறிவிக்காமல் முடிந்துபோன பாமக பொதுக்குழு கூட்டம்

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் மாநில நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும், யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்குவது என பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பா.ம.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தீர்மானங்களை கவுரவ தலைவர் ஜி.கே.மணி வாசித்தார். இந்த கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wnrcbntb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதில் சில:

*லோக்சபா தேர்தல், தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதில் முக்கியமானது என பா.ம.க., கருதுகிறது.*இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதி செயல்படுகிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் பாதிப்பும் இல்லை.*2024 லோக்சபா தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.*எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

7 தொகுதிகளில் வெற்றி

முன்னதாக இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: முன்பை விட உறுதியாக இருக்கிறோம். உற்சாகமாக இருக்கிறோம். எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க நாம் தயார் நிலையில் இருக்கிறோம். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றி பெற முடியும். ஆனால், உங்கள் விருப்பம், தனித்து போட்டியிடக்கூடாது என்பதாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராமகிருஷ்ணன்
பிப் 02, 2024 06:13

எத்தனை வருடங்களாக உங்கள் ஜாதி கட்சியை மக்கள் பார்த்து வருகிறார்கள். உங்களின் ராஐ தந்திரம் எல்லாம் வீணாகி விடும் காலம் இது. முதலமைசர் ஆகி கையெழுத்து போட ஒரு பேனாவை மகனுக்கு பரிசு அளித்து மனதை ஆறுதல் படுத்தி கொள்.


Shankar
பிப் 01, 2024 23:54

அவ்வளவு தைரியம் இருந்தால் தனியாத்தான் நின்னு அந்த ஏழு தொகுதிகளில் ஜெயித்து காட்டவேண்டியது தானே? எதுக்காக கூட்டணி? தேசியம் மாநிலம்னு பேசும்போது இவங்க பாஜக பக்கம் சாய வாய்ப்புள்ளது. இவங்க கேட்கும் தொகுதிகள் திமுகவால் கொடுக்க வாய்ப்பில்லை.


J.V. Iyer
பிப் 01, 2024 21:12

சாதிக்கட்சிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கின்றன. என்ன செய்வது?


Indian
பிப் 01, 2024 20:05

யார் கனமான சூட்கேசை தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அநேகமாக பாஜக தான் விலைக்கு வாங்கும் அது தான் பணக்கார கட்சி


aaruthirumalai
பிப் 01, 2024 19:22

அப்பா நல்லா இருக்க மகன் விரும்புகிறார். மகன் நல்லா இருக்க அப்பா விரும்புகிறார். மக்கள் எதை விரும்புகிறார்கள்?


K.Ramakrishnan
பிப் 01, 2024 18:46

பேரம் படியவில்லை.. அதனால் தான் இழுபறி.. அப்பாவுக்கு மகன் கேட்கிறார் பாரத ரத்னா. மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறார் அப்பா இது தான் உண்மையான ஒரு குடும்ப அரசியல்.


V GOPALAN
பிப் 01, 2024 18:43

For PMK election time is collection time. The beg with DMK ADMK and BJP and who ever gives more they will run away even without campaign and retain the money till next election.


Bala
பிப் 01, 2024 18:22

இவரு லெப்டடூ க்ரீன் போட்டு ரைட்டு திரும்ப போறாரு போல


Bala
பிப் 01, 2024 17:18

பின்ன என்ன, தனித்து போட்டியிட வேண்டியது தான. ஏழு எம்பிக்கள் கிடைப்பாங்கல்ல. அப்புறம் எதுக்கு கூட்டணி வைத்து ஒரு சீட் கூட வெற்றி பெறாமல் போகணும். கூட்டணி வைத்ததால் தான் தோல்வி என்று அடுத்த ஐந்து வருஷம் வண்டிய ஒட்டலாம். இந்த உதார்லாம் வேண்டாம். இன்னுமா இந்த ஊர் உங்கள் நம்பிட்டிருக்கு....


krishnan
பிப் 01, 2024 16:26

Anbumani is demanding Bharat Ratna for his father Ramdas, then hell join BJP it seems for alliance in lok sabha polls


மேலும் செய்திகள்