மேலும் செய்திகள்
விவசாயிகளிடம் சூரியசக்தி மின்சாரம் வாங்க டெண்டர்
2 minutes ago
ஓசூர் விமான நிலையம் தயாராகிறது திட்ட அறிக்கை
4 minutes ago
கூடுதலாக 20 லட்சம் ஓட்டு எப்படி: நாராயணசாமி
10 minutes ago
கூட்டணி அமைச்சரவை நிச்சயம்
14 minutes ago
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டிசம்பர், 8ம் தேதி டில்லியில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆணையம் அவ்வப்போது கூடி, முறைப்படி நீர் திறக்க உத்தரவிட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி வழங்காமல் தடுக்க, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 'மேகதாது அணை தொடர்பான கருத்துகளை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டில்லியில் டிச.,8ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் மேகதாது அணை குறித்து, காரசார விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.
2 minutes ago
4 minutes ago
10 minutes ago
14 minutes ago