உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எட்டு வீடுகள் வரை பணி நிறைவு சான்று வேண்டாம்: முத்துசாமி

எட்டு வீடுகள் வரை பணி நிறைவு சான்று வேண்டாம்: முத்துசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்தில், எட்டு வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு அளிக்கப்பட உள்ளது,'' என, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' மாநில மாநாட்டில், அவர் பேசியதாவது:நகர், ஊரமைப்பு சட்டத்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், விரைவில் பிறப்பிக்கப்படும். கட்டுமான திட்ட அனுமதிக்கு, ஒற்றை சாளர முறையை, எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்த தயாராகிவருகிறோம்.திட்ட அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும், விபரங்களையும் உரிய முறையில் அளித்தால், முடிவு எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கலாம்.பெரும்பாலான திட்டங்களில், விண்ணப்பதாரர் தரப்பில் அலட்சியமாக இருப்பதும் தாமதத்துக்கு காரணமாகிறது.சாதாரண குடியிருப்பு கட்டடங்களின் உயரம், பொது கட்டட விதிகளில், 39 அடியாக உள்ளது. இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் வைத்து, இந்த உயரத்தை, 45 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதே போன்று, சாலை அகல அடிப்படையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை உயர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக, உரிய உத்தரவுகள் விரைவில் வெளியாகும்.கர்நாடகாவில் உள்ளது போன்று, உரிமையாளரின் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்யும் போதே, விதிமீறல் அதிகமாக வருகிறது.உரிமையாளர்கள் பொறுப்புடன் நடக்க முன்வந்தால், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, இந்நடைமுறையை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.தற்போது, பொதுகட்டட விதிகளின்படி, 8,000 சதுர அடி அல்லது, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதை, எட்டு வீடுகள் என்று மாற்றுவதற்கான உத்தரவு, விரைவில் வெளியிடப்படும்.தமிழகத்தில், 7 சதவீத பகுதிகளுக்கு மட்டும் தான் முழுமை திட்டம் உள்ளது. இதை, 19 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், எட்டு நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நகர், ஊரமைப்பு துறை இயக்குனர் பி.கணேசன், கிரெடாய் தேசிய துணை தலைவர் ஸ்ரீதரன், தமிழக பிரிவு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

duruvasar
ஜன 30, 2024 12:01

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல இதை நன்குணர்ந்ததான் அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுபோக பொறம்போக்கு நிலங்களில் இந்த எட்டு புகுந்து விளையாடும் என்பதில் ஐயமில்லை.


R. Shanmuga sundaram
ஜன 30, 2024 10:45

TANGEDCO அதிகாரிகள் 3 அல்லது 4 மாடிக்கு approval வாங்கி குடும்பச் சூழல் /கொரோனா பாதிப்பு முதலிய வற்றால்12 மீட்டருக்கு கீழ் ஒரு மாடி மட்டும் கட்டினாலும் completion certificate கேட்கிறார்கள். EB தர மறுக்கிறார்கள். ஆவண செய்யவும்.


Hari
ஜன 30, 2024 10:02

விரைவில் லோக்சபா தேர்தல் வருகிறது அதனால ஆவணங்களை விறைத்து கொடுத்தாலும் கொடுக்காவிடடாலும் சூட்கசுடன் யார் எவர் வந்தாழும் அனுமதி உண்டு.


Seshan Thirumaliruncholai
ஜன 30, 2024 08:54

சாதாரண குடிமகன் வீடு காட்டினால் லாப வியாபார நோக்கம் இல்லை. ஒரு சிறிய தவறு செய்துவிட்டால் இவன் படும் பாடு எழுத்தில் கூற இயலாது. ஆனால் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கண்மூடி திருப்பதற்குள் தடையில்லா சான்று பெறமுடிகிறது. எப்படி பெறுகிறார்கள் எவ்வாறுபெறுகிறார்கள்? அடுக்குமாடி குடியிருப்ப கட்டுவதால் கூட்டுக்குடும்பம் என்ற சமுதாய ஒற்றுமை சீரழிந்துவிட்டது. கிணறுகள் குறைந்துவிட்டன. கிணறுகள் இருக்கும்போது வீடுகள் மங்களகரமாய் இருந்தது.


Duruvesan
ஜன 30, 2024 06:25

காசு துட்டு money


சூரியா
ஜன 30, 2024 05:43

ஒரு சாதாரண 6,000 சதுர அடி கட்டிடம் கட்ட, கட்டிட அனுமதி, CC சான்றிதழ்,குடிநீர்/ கழிவு இணைப்பு, மின் இணைப்பு, லிப்ட் அனுமதி இவைகள் வாங்க சுமார் ₹12 லட்சம் லஞ்சம் தரவேண்டிய உள்ளது. கவுன்சிலர்களின் அதிகாரப் பிச்சை வேறு. இதற்கெல்லாம் என்று விடிவு வரும்?


Hari
ஜன 30, 2024 09:28

நல்லவர்கள் ஆச்சிக்கு வரணும்.


Hari
ஜன 30, 2024 09:30

தீயசக்தி தி மு க போகும்வரை யாரும் சொந்த வீடு தனி வீடு என எண்ணாதீர்கள், மாதா கோவிலில் மணி அடிக்க விட்டு விடுவார்கள் இந்த தி மு க வினர்.இருந்தாலும் கோபாலபுரத்தார்கள் மிக நல்லவர்கள் சன் செய்தி


Kasimani Baskaran
ஜன 30, 2024 05:15

இது வரை விண்ணப்பித்தவர்கள் உரிய முறையில் அல்லாமல் கவனக்குறைவாக விண்ணப்பித்தார்கள். இது போல பேச ஒரு மந்திரி... ஓட்டுப்போட்டவனெல்லாம் பாவம்யா...


MANI DELHI
ஜன 30, 2024 09:13

ஆவணங்களை மக்கள் தருவது இல்லயாம். அதனால தான் தாமதம் ஆகுதாம். பெரிய யுரேகா கண்டு பிடிப்பு. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போலீசில் புகார் கொடுத்துவிட்டு அதன் நகலை இவரது துறைக்கு அனுப்புங்கள் என்று சொல்வாரா இந்த தொடை நடுங்கி. ஏன் என்றால் வாங்கசொல்வதே அண்ணன்கள் தான். இவனையெல்லாம் பேச சொல்வது தான் காலத்தின் கோலம்.


வெகுளி
ஜன 30, 2024 04:05

தேவையான அனைத்து ஆவணங்களையும், விபரங்களையும் உரிய முறையில் அளித்தால், முடிவு எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கலாம்... உரிய முறையில்.... புரிஞ்சுதா?...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி