உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார்:திருச்செந்துார் முருகன் கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட, உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் சன்னிதி கோபுர கலசங்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை