தொண்டனாக இரு!
UPDATED : மே 06, 2015 | ADDED : மே 06, 2015
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.* சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளினால் கடவுளின் தரிசனத்தைப் பெறலாம்.* புற அழகைக் காட்டிலும், உள் மனதில் கிடைக்கும் அமைதியே உயர்ந்தது.* கடவுளின் திருநாமத்தை பக்தியுடன் சொல்லவே நமக்கு நாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பிறருக்குச் சேவை செய்யுங்கள்.-சாய்பாபா