உள்ளூர் செய்திகள்

உழைத்து சம்பாதியுங்கள்

* மலர்ந்த தாமரையில் மணம் கமழ்வது போல, நல்லவர்களைச் சுற்றி நல்ல எண்ண அலைகள் பரவி இருக்கும். * அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.* கடவுளுக்குப் படைத்த உணவைச் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தோடு உள்ளமும் பலம் பெறும்.* அரிதான இந்தப் பிறவியை, கடவுளை அறிவதற்காகப் பயன்படுத்துபவனே சிறந்த அறிவாளி.* எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. உழைப்பினால் கிடைக்கும் சம்பாத்தியமே சிறந்தது.- சாய்பாபா