உதவிக்கரம் நீட்டுங்கள்
UPDATED : செப் 20, 2016 | ADDED : செப் 20, 2016
* பிறருக்கு உதவி செய்து வாழ்வதையே வாழ்வின் லட்சியமாக ஏற்று செயல்படுங்கள்.* கடவுளை முழுமையாக நம்பினால் வாழ்வில் நல்லொழுக்கம் இயல்பாக அமைந்து விடும்.* குறிக்கோளை அடைய விரும்பினால் முயற்சியும், கடின உழைப்பும் அவசியமானவை.* பிறருடைய கருத்துக்கு மதிப்பளிப்பதும், மற்றவர் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதும் மேலான பண்பு.* தனி மனித ஒழுக்கமும், கட்டுப்பாடான வாழ்வும் நல்ல சமுதாயத்தை உருவாக்க அவசியமானவை. - சாய்பாபா