பெண்களை மதியுங்கள்
UPDATED : அக் 31, 2016 | ADDED : அக் 31, 2016
* சக்தியின் வடிவமான பெண்களை பலவீனமாக கருதாதீர்கள். அவர்களை மதிப்புடன் நடத்துவது நம் கடமை.* ஒழுக்கமே வாழ்வில் உயர்வதற்கான ஒரே வழி. ஒழுக்கத்தை பின்பற்றி விட்டால் உலகிற்கே நன்மை உண்டாகும்.* ஒழுக்கம் இல்லாத அறிவாளியை விட, ஒழுக்கமான பாமரன் உயர்ந்தவன்.* பெரியவர்களையும், நல்லவர்களையும் பார்த்தால் உடல் மட்டுமில்லாமல் உள்ளத்தாலும் பணிவுடன் வணங்குங்கள்.- சாய்பாபா