உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சிக்கான வழி

* செல்வத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானதல்ல. சுயநலமற்ற சேவையே மனதிற்கு நிலையான மகிழ்ச்சி தரும். * ஆடம்பரத்தை அரக்க குணம் என்றே சொல்ல வேண்டும். தலைவனாக வாழ விரும்புவன் எளியவனாக வாழப் பழக வேண்டும்.* பிறர் புகழ்வதையும், இகழ்வதையும் பொருட்படுத்த வேண்டாம். மனதிற்குச் சரியெனப் பட்டதைச் செய்யுங்கள்.* கடந்த காலத்தை மீண்டும் பெற முடியாது. வருங்காலம் நம் கையில் இல்லாதது. அதனால், நிகழ்காலத்தை பயனுடையதாக்குங்கள்.* வாழ்க்கையை சத்திய சோதனையாக எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் சத்தியத்தைக் கடைபிடியுங்கள்.சாய்பாபா