உழைத்து வாழ வேண்டும் (2)
UPDATED : ஏப் 24, 2015 | ADDED : ஏப் 24, 2015
* உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.* இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.* தீய எண்ணம் கொண்டவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஏற்பதில்லை.* பெற்றோரின் அருட்கொடை உடல். அதற்காக நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.* வழிபாடு என்னும் கருவியால் உள்ளத்தை ஆழமாகத் தோண்டினால், அதில் அன்பு பெருக்கெடுக்கும்.* உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.-சாய்பாபா