பெற்றோரை நேசி
UPDATED : ஏப் 07, 2024 | ADDED : ஏப் 07, 2024
நபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர், ''நான் யாரிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும்'' எனக் கேட்டார்.அதற்கு அவர், ''ஈன்றெடுத்த தாய் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் அவரிடம் மென்மையாக நடந்து கொள். அடுத்து தந்தையாரை மதிப்புடன் நடத்து. இருவரையும் நேசிப்பது உன் கடமை. பின்னர் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்'' என்றார். இந்த நிகழ்ச்சி உணர்த்துவது ஒன்றுதான். மனிதன் முதலில் பணிவிடை செய்ய வேண்டியது அவரவர் பெற்றோருக்கே. பின் உறவினர், நண்பர்கள், சமுதாயம் என உதவிகளைச் செய்யலாம். இதற்காகவே, 'பெற்றோருக்கு நன்றி செலுத்தும்படி மனிதனுக்கு கட்டளையிட்டோம்' என்கிறான் இறைவன்.