கவிதைச்சோலை! - இருவரை நினைவூட்டும் இனிய விழா!
தீபங்களின் வரிசைதீபாவளி என்கிறதுதீபாவளிக்கான விளக்கம்!தீபாவளிநரகாசுரன்ஒருவன் மரணத்திற்கானஒரு விழா அல்லமகாபலியையும் சேர்த்தேமனதில் நினைக்க வேண்டிய நாள்!இருள் விலகிஒளி பிறக்கும்விடிவெள்ளி வேளையேதீபாவளித் திருநாள்கொண்டாட உரிய வேளை!விடியற்காலையில் நீராடிவிளக்கேற்றும் ஸ்தலங்கள் எங்கும்தங்க வருவாள் மகாலட்சுமி என்கிறதுவிஷ்ணு புராணம்!மாலை வேளை ஏற்றும் விளக்குமனதில்எம பயம் போக்குவதோடுஅகால மரணத்தைஅகற்றிக் காக்கிறது என்கிறதுபவிஷ்ய புராணம்!தண்ணீரில் கங்கையும்தலை முழுகும் நல்லெண்ணெயில்திருமகளும் உறைவதாய்பெரியோர் வாக்குபிரகடனப்படுத்துகிறது!புராணங்களும், பெரியோர் வாக்கும்பொருள் பொதிந்தகருத்துக் களஞ்சியம்!நீராடும் நீராட்டுபுறத்துாய்மைக்கும்நீராடும் நேரத்துஆண்டவனிடம்அகந்தையும், ஆணவத்தையும்அகற்ற வேண்டிக் கொண்டு நீராடுவதுஅகத்துாய்மைக்கும் சேர்த்தேஅஸ்திவாரமிடுகிறது!உடலும், உள்ளமும்துாய்மைப்படுகையில்உலகில் ஒற்றுமை பலப்படும்!அகமும், புறமும் துாய்மையானால்ஒளிரும் ஒளிமிளிரும், 'ஞான ஒளி'யாய்நம்மை மகிழ்விக்கும்!மனமது செம்மையானால்மந்திரம் ஜெபிக்க வேண்டாம்தீபாவளி முதல்தழைத்துலகம் தலை நிமிரும்இந்நந்நாளில்இருவரையும் நினைத்துஇன்புற்று அகம் மகிழ்வோம்!ஆனந்தத்தில் திளைக்கட்டும்அனைவர் மனமும்!— வளர்கவி, கோவை