கவிதைச்சோலை: மரம் நட்ட மாமனிதர்!
ஜூலை 27, அப்துல் கலாம் நினைவு நாள்கனவு காணுங்கள் என்றுதரிசாகக் கிடந்தகரிசல் காடுகளிலும்கனவுகளை விளைவித்தவர்!வீடுகள் தோறும்செய்தித்தாள் வீசியபோதேதானும் ஒருநாள்தலைப்புச் செய்தியாகவருவோம் என்று கனவு கண்டவர்!மண் வெளியில் விளையாடும்போதும்விண்வெளிக் கனவுகளில்வலம் வந்தவர்!கொண்ட கனவை நனவாக்ககண்ணுறங்காமல் உழைத்தவர்இயலாது என்று இருந்து விடாமல்இன்னும் இன்னும் என்றுஇறக்கைக் கட்டி பறந்தவர்!பிறப்புஒரு சம்பவமாக இருந்தாலும்இறப்புஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றவர்!சொன்னது போல இந்தியாவின்முதல் குடிமகனாய் உயர்ந்தார்முன்மாதிரி குடி மகனாய் வாழ்ந்தார்!நேர்மையும், எளிமையும்இவரது வாழ்க்கை வண்டிக்குஇரு தண்டவாளங்கள்!மாணவர் மத்தியில்மகிழ்ச்சியோடு உரை நிகழ்த்திமாணவர் எழுச்சிக்கு வித்திட்டவர்!சும்மா கிடந்த காகிதங்களைசித்திரக் காகிதங்களாய் மாற்றிசரித்திரம் படைத்தவர்!இவர் சொன்ன பொன்மொழிகள்எம்மொழியிலும் இல்லாதவிண் மணிகளாய் மின்னுகின்றன!இவரதுஏவுகணையின் வீரியம் கண்டுவிண்வெளியே வியந்து போனது!கூடங்குளம் அணுமின் நிலையபயன்பாடு குறித்த - இவரதுகட்டுரை படித்தபோது, அணு உலையே ஆச்சரியப்பட்டது!மரம் நடச்சொல்லிமனித இதயங்களில்மனிதம் நட்டவர்; சிகரம் தொட்டவர்!இளைஞர்களுக்கு வழிகாட்டிவாழ்க்கையில் நம்பிக்கையூட்டிவெளிச்சம் காட்டிய மாமனிதர்!இவர் நினைவாகஇளைஞர்கள் நட்ட மரங்கள்இப்போது நிழல் தருகின்றன!அதனால் இனி -அசோகர் மட்டுமல்லாமல்அப்துல் கலாமும்மரம் நட்டார் என்று சொல்லுங்கள்!என்.ஆசைத்தம்பி, சென்னை.