உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கனவு மனிதர்கள்!துளிர் மரம் அருகேயிருக்கதூரத்துப் பச்சையைதுரத்திச் செல்பவர்கள்...அலைகடலின் நுரைமேலேஅப்பளத்தை மிதக்கவிட்டுஅக்கரைக்குச் செல்லஆசைப்படுபவர்கள்...முயற்சி என்னும் தேருக்குமுட்டுக்கட்டை போட்டுவிட்டு - காலைமுன்வைத்து நகராமல்முடங்கிக் கிடப்பவர்கள்...கடும் வெயில் பாலையிலேகாளான்களின் நிழலிலேகளைப்பாற நினைப்பவர்கள்...காக்கையும் வரத் தயங்கும்காய்ந்து உலர்ந்த மரத்தினிலும்கனிபறிக்கக் காத்திருப்பவர்கள்...நம்பிக்கையை மறந்துவிட்டுநட்சத்திரப் பலனை மட்டும்நாசூக்காய் பார்ப்பவர்கள்...புஜங்களை நம்பாமல், புதிய முயற்சி செய்யாமல்,புண்ணியத் தலங்களுக்குபுறப்பட்டுச் செல்பவர்கள்...ரவுண்டுக் கல்பதித்தராசிக்கல் மோதிரமும்ராகுவுடன் கேதுவிற்குராத்திரிப் பூசைகளும்உழைப்பை மறந்து உறங்கி,கனவுகளில்உழன்று திரிவதனால்உப்புக்கும் பயனில்லை!— சரவணன், கல்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !