கவிதைச்சோலை!
வீழ்வதற்கல்ல!நினைப்பது போல் வாய்ப்பதில்லை வாழ்க்கைவாய்ப்பதுவும் மனம்தூய்ப்பது போல் இருப்பதில்லை!முயற்சியில் முட்டுக்கட்டைகள்தட்டுப்படவே செய்யும்காலம் நமக்கு பசுவைத்தான் தந்திருக்கிறது நெய் பெறும் முயற்சியை நாம் தான் துவங்க வேண்டும்!பால பருவத்தில் எத்தனையோ முறைவீழ்ந்து எழுகிறோம் அப்போதெல்லாம்அச்சமும் அவநம்பிக்கையும் சோர்வும் விரக்தியும்ஆட்கொண்டதில்லை நம்மை!விவேகத்துடன்அழுத்தமாக நாம்வைக்கும் அடியில்சறுக்கல்கள் நிகழ்வதில்லை!துணிவுடன் நம்பிக்கையாய்சவால்களை சந்திக்கையில்தோல்விகள் கூடத் துவண்டுவிடும்!வாழ்க்கையில் வீழ்வது நாம் அடையப்போகும் வெற்றியைவிளக்கிச் சொல்லவே!விழுவோம் - இனிஎழுச்சியின் சூத்திரம் கற்கஎழுவோம் - இனிவிழும் காரணிகளைவெற்றியின் படிகளாக்க!— செல்லம் ரகு, திருப்பூர்.