உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஓலம்!கட்டி அணைக்கவளையல் கொஞ்சும்கைகளுண்டு!முடிந்தவரைமுத்தம் கொடுத்துஇம்சிக்க இதழுண்டு!கடித்து மகிழகன்னமோரெண்டுண்டு!இழுத்து மகிழகருங்கூந்தல்நீண்டுண்டு!காட்டுவதைவாங்கி தரகைகாசு பலமுண்டு!ஈரம் செய்தாலும்மாற்றுத்துணிபட்டுண்டு!சுரண்டி விடகிறுக்கித் தள்ளவீட்டில் வெட்டிசுவர்பலவுண்டு!படுத்துறங்க ஆளின்றிதவிக்கும் மடியைப்போல்காற்று வாங்கும்கருவறை தானுண்டு!பலருக்கு,'வசவச ' ன்னு கிடைத்திருக்க...காதோரம் வறுத்தெடுத்தவார்த்தைகளால் வதங்கிநடைபிணமான எனக்குகிடைக்க வரமுண்டா...ஒண்ணே ஒண்ணு!வேணிமகள், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !