உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மாயமான்கள்!தண்ணீரை சல்லடையில் சலித்தெடுக்கும்சூட்சுமத்தை அறிந்தவர்கள்பணத்தாளால் குளிரூட்டிஉறைய வைத்து திடமாக்க தெரிந்தவர்கள்!தினசரியையும், ஊடகத்தையும்சூடாக வைத்திருக்க வாய்ப்பு தரும்வல்லமை பெற்றவர்கள்...நாடு வெந்து புழுங்க அந்த வெப்பத்தில்குளிர் காயும் குணவான்கள்!விளையாடும் பரமபதத்தில்எல்லா கட்டங்களிலும்ஏணிகள் மட்டும் தான்...ஒவ்வொரு உருட்டலிலும்விழுவதெல்லாம் தாயம் தான்...சொன்னபடி விழுவதற்கேபகடைகளாய் மக்கள்!கும்பிட்டு கெஞ்சி கேட்டுகாலில் விழுந்து கஷ்ட வழியில்வாங்கியது போய்இலவசம் வீசி சத்தியம் வாங்கிநிச்சய வெற்றியை தேர்தலில் பறிக்கும்வித்தையை கற்றுத்தேர்ந்த வித்தகர்கள்!மானியம் இலவசம் என்ற வண்ணம் பூசியவானவில்லை வலையாக்கி வாய்ஜால முடிச்சிட்டுஓட்டுகளை வேட்டையாடும்சைவக் கொக்குகள்!அதிகாரம் நோக்கி வைக்கும்கால் தடத்தின் முதல் இரண்டு அடிகளுக்குவிதிமீறல்களே முதல் தகுதியென்னும்விதிமுறையை வகுத்துக்கொள்ளும்வித்தியாசமான அரசியல்வாதிகள்இங்கே சிலர்!இந்த மாய மான்களின் கவர்ச்சியில் விழுந்துஉரிமைகளை, பெருமைகளை மறந்து பறி கொடுக்கும் பாமரர்களுக்குபுரிய வைக்கும் பொறுப்புள்ளோர்பலரும் அந்த சமூக வலைதளத்தில்சக நிழல் மனிதர்களோடுசதுரங்க விளையாட்டில்வெகுமதியில்லா வெற்றிக்காய் விடியும் வரை விரல் யுத்தம் நடத்துகின்றனர்!— டி.டி.மணிவண்ணன், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !