உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒற்றைக் காலில் ஒரு தவம்

ஒன்றைக் காலில் நின்றுதவம் செய்யும் நாடுஇந்தியா!அது - ஊன்றி நிற்கும் காலையேஉலகம்'அஹிம்சை' என்று ஆராதிக்கிறது!சமாதானமும், சக வாழ்வும்அதன்இரு கண்களாக இருந்துகனிவை பொழிந்துகவுரவம் சேர்க்கிறது!அதன்பிரிவு பார்வைஅமர நிலை ஊட்டும்அறிவுச் சுரங்கம்!அந்நிய தேசத்தின்ஒரு பிடி மண்ணுக்கு கூடஆசைப்படாத தேசம்இந்தியா!பாரதி, தேசத்தையும்தேசம், பாரதியையும்பற்றிப் பிணைந்திருக்கும்பிரம்ம விருட்சங்கள்!பாரதி படைத்தஆத்தி சூடியைஅடி மாறாமல் பின்பற்றுவதுஇந்தியா மட்டுமே!அச்சம் தவிர் துவங்கிவரிக்கு வரிவரலாறு படைப்பதால்அதன் வலிமைவணங்கத்தக்கதாகிறது!சீறுவோர் சீறு என்பதில்தெளிந்த ஞானியாய்திகழ்வது பாரதம்!சீண்டும் தேசங்களைஅடக்கி ஒடுக்கஒருபோதும் அதுஅம்பறாத் துாணியில்நம்பிக்கை வைப்பதில்லை... மாறாக,அஹிம்சையில் நம்பிக்கை வைக்கிறது!வளர்ச்சியை வேரறுக்க விரும்புவர்கள்கை வைப்பதுநம் எல்லையில் அல்லநம் கொள்கையில்!இந்தியாசாத்வீக பூமி...அதன் சக்தி அறியாமல்சண்டைக்கு அழைப்பதுஆழம் தெரியாமல்காலை விடும் காரியம்!இதை -காலம் காட்டும் முன்கவனம் தேவை!வாலிதாசன், நெல்லை.

எனது தேசம்!

* எம் முந்தையர் ரத்தம் சிந்தியவேள்வியில் விளைந்ததுஇந்திய தேசம்!* எந்த நாட்டிலும்இல்லா விந்தைகள் ஆயிரம்இருந்திடும் தேசம்!* மலையும், காடும்,ஓடும் நதியும், அலையும் கடலின்ஒவ்வொரு துளியும்என் தேசத்தின் பெருமை பேசும்!* இந்திய மலைக்கும்முக்கடல் முனைக்கும்சுதந்திர காற்றுவீசும்!* முகங்களில், மொழிகளில்வேற்றுமை இருக்கலாம்...மதங்களில் கூடபலவகை இருக்கலாம்...மனங்களில் நாங்கள்இந்தியர்கள்!* அன்னை பூமியாம்பாரத நாட்டின் பிள்ளைகள்என்பதில்எத்தனை எத்தனைஆனந்தம்!* எல்லைக்குள் ஏதும்தொல்லைகள் என்றால்ஒவ்வொரு வீட்டிலும்ஆள் வரும்!* வாங்கிய விடுதலைதாங்கிப் பிடிப்போம்...வான் முட்டி பறக்கட்டும்சுதந்திர கொடியைதுாக்கிப் பிடிப்போம்!* இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம்...எப்போது கேட்டாலும்தப்பாது சொல்வோம்...வாழ்க இந்தியமணித்திரு நாடு!எம். செல்வகுமார், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !