கவிதைச்சோலை!
நிலைதனில் நிலையாய்!தருவதும், பெறுவதும்அன்பின் நிலைவருவதும், போவதும்செல்வத்தின் நிலை...குழம்புதலும், தெளிதலும்மனதின் நிலைஉயர்தலும், தாழ்தலும்உள்ளத்தின் நிலை...மறுப்பதும், ஏற்பதும்விருப்பத்தின் நிலைகொடுப்பதும், எடுப்பதும்படைப்பவன் நிலை...நன்மையும், தீமையும்செயல்களின் விளைவுகூடுதலும், நீங்குதலும்உறவுகளின் இயல்பு...ஆற்றலும், அறிவும்அவரவர் தெளிவுவெற்றியும், தோல்வியும்அவரவர் முயற்சி...நிலைகளின் நிலையில்நிலையில்லா வாழ்வுபிழைகளைத் தந்துபிழிகிறதே அனுபவமாய்!கனகா பாலன், சென்னை.