உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நான், நானாக...பிறந்த போது ஓர் முகம்சிறுவயதில் ஓர் முகம்வாலிபத்தில் வனப்பு முகம்நடு வயதில் அகந்தை முகம்முதுமையில் சோர்ந்த முகம்எதுதான் என் முகம்...எல்லாமுமே தான்!அறியா வயதில் ஆசைப்பட்டதுவாலிபத்தில் மோகம் கொண்டதுநடுப்பிராயத்தில் நினைத்ததுவயோதிகத்தில் வாடியதுஎதுதான் என் ஆசை...எல்லாமுமே தான்!கேட்டது யாவுமே கிடைத்ததாநினைத்தது எல்லாம் நடந்ததாபேச நினைத்ததைப் பேசினோமாசெய்ய நினைத்ததைச் செய்தோமாசாதிக்க நினைத்ததைச் சாதித்தோமாஎல்லாமே யாருக்காக?பெற்றோர், உற்றார், உறவுஉலகு, பெயர், புகழுக்காகமாறி மாறிவேறு வேறு முகங்கள்வெவ்வேறு ஆசைகள்!எல்லா நேரத்திலும்தூரத்தில் இருந்து ஓர் முகம்என்னைப் பார்த்துக்கொண்டே இருந்ததே...அது பேசாமல்நான் பேசுவதை எல்லாம்கேட்டுக் கொண்டே அமைதி காத்ததே...அது யார்... அதுவும் நானா...நான், நானாக மட்டுமே இருந்ததுஎப்போது?— தேவவிரதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !