நம்மிடமே இருக்கு மருந்து: லவங்கப்பட்டை!
லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி - ஒரு தேக்கரண்டி, தேன் - ஒரு தேக்கரண்டி, சுடு தண்ணீர் - இரண்டு தேக்கரண்டி சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும்.* லவங்கப் பவுடர் - இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்* சுத்தமான தேன் - ஒரு மேஜைக்கரண்டி, லவங்கப்பட்டை பவுடர் - ஒரு தேக்கரண்டி கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், இரண்டு வாரங்களில் முகப்பரு மறைந்து விடும்* லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்* சூடான தேன் - ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர் - நான்கு தேக்கரண்டி கலந்து, காலை, மாலை என, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்* லவங்க பவுடர், தேன் - தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால், வலி நீங்கி விடும்* வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்* தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்* தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்* லவங்க பவுடர் - ஒரு சிட்டிகை, தேன் - அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.தொகுப்பு: வி. சி. கிருஷ்ணரத்னம்.