உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பொங்கலோ பொங்கல்!

புதுப்பானை போலகவனமாக கையாளுங்கள்கிடைத்திருக்கும் வாழ்க்கையை!புதுமஞ்சள் போலதுாய்மையான எண்ணங்களால்நிரப்புங்கள் மனதை!கரும்பை போலஇனிப்பான நினைவுகளைசக மனிதருக்கு வழங்கிடுங்கள்!பொங்கும் சோற்றைப் போலநிபந்தனை ஏதுமற்றுஎல்லார் வாழ்விலும்மகிழ்ச்சியை நிறையுங்கள்!விரல்களுக்குள் பேதம் பாராமல்கை என்றழைப்பது போல்சுற்றத்தார், நண்பர்கள்சுற்றியுள்ளோர் அனைவரையும்நேசத்தில் அரவணையுங்கள்!கதிரவனின் சேவைக்குநன்றி கூறிடும்பண்பட்ட இனத்தோர் என்றபெருமிதத்தோடு படையலிட்டுபங்கிட்டு பசியாற்றுங்கள்!மனித குல வரலாற்றின்ஆதிசடங்கை நிறைவேற்றியஆனந்தத்தோடு ஒன்றிணைந்துபொங்கலோ பொங்கல் என்றுபூரிப்போடு கூவிக் களித்திடுங்கள்!— மு.நந்தனா, பனையபுரம், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !