உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 51 கேள்விகளுடன் அரசு சர்வே: பல்ஸ் பார்க்கிறது உளவு போலீஸ்

51 கேள்விகளுடன் அரசு சர்வே: பல்ஸ் பார்க்கிறது உளவு போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக உளவுத் துறை போலீசார், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுதும் 'சர்வே' எடுத்து வருகின்றனர். ஆட்சி மேலிடத்தில் இருப்போர் ஆலோசனைப்படி, உளவுத் துறை தலைவர் தயாரித்திருக்கும் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் 51 கேள்விகளுக்கு விடை தேடி, பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் வேறுபட்ட மனிதர்களை சந்தித்து, விபரங்கள்திரட்டப்படுகின்றன. தனியார் மற்றும் கட்சி யின் மேலிட பிரமுகர்கள் நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன.லேட்டஸ்டாக உளவுத்துறை போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படிவத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கேள்விகள்: தொகுதி எம்.பி., தொடர்ச்சியான மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறாரா?மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மக்களை சந்திக்க வந்தாரா?பொது நிகழ்ச்சிகளில் எம்.பி.,யை பார்க்க முடிந்ததா?அவரை எளிதில்சந்திக்க முடிந்ததா?தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னை என்ன? அது எம்.பி., கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா? தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படும் இயக்கம் எது?தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? முதல்வர் செயல்பாடு எப்படி உள்ளது; அமைச்சர் உதயநிதி செயல்பாடு எப்படி?நலத் திட்டங்கள், உரியவரை சென்று சேருகிறதா?அண்ணாமலை செயல்பாடு எப்படி உள்ளது? அவருடைய செயல்பாடுகளை ஆதரிக்கிறீர்களா... வெறுக்கிறீர்களா?மத்திய அரசு திட்டங்களால் ஏதேனும் பயன் உள்ளதா?நடிகர் விஜய் கட்சித் துவங்கும்பட்சத்தில், அவருக்கு ஆதரவு உண்டா?தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?இப்படி 51 கேள்விகளுக்கும் தமிழகம் முழுதும் 25,000 பேரிடம் இருந்து விபரங்கள் பெறப்படுகின்றன.வரும் 10க்குள் முழு விபரங்களையும் தொகுத்து மேலிடத்துக்கு அளிக்க இருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன- நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram
பிப் 04, 2024 21:23

தி மு கவின் பயம் தெரியுது


g.s,rajan
பிப் 04, 2024 20:09

எல்லாம் வாயில வட சுடுறாங்க,வாய்ப்பந்தல் போடுறாங்க ,அப்புறம் எதுக்கு சர்வே,மண்ணாங்கட்டி ....


Anantharaman Srinivasan
பிப் 04, 2024 18:21

எங்கு சர்வே எடுக்கிறார்கள்..?? என் கண்ணில் படவில்லையே..? நான் பதிலளிக்க வேண்டுமென்றால் எங்கு போய் சந்திக்க வேண்டும். Online சர்வே எடுத்தாலென்ன..??


HoneyBee
பிப் 04, 2024 17:25

நல்லா பயம் தெரியுது அண்ணாமலை அவர்களை பார்த்து.... ஏன் இப்ப சொல்லுங்க பாஜக வளரலன்னு


Mani . V
பிப் 04, 2024 16:11

நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை. இதில் சர்வே . இதற்கு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடியை செலவு செய்து தொலையப் போறாங்களோ?


PRAKASH.P
பிப் 04, 2024 11:56

Wasting public money. Now even small kids can tell how DMK looters performance


Godyes
பிப் 04, 2024 11:32

கலாச்சாரத்தில் உயர்ந்த தமிழரை திராவிடர்கள் ஆக்கி அவர்கள் எப்படியோ அப்படியே மாற்றி விட்டார்கள்.


rasaa
பிப் 04, 2024 10:34

50 என்ன 100 கேள்விகளுக்கும் திருட்டு கூட்டத்திடமே பதில் உள்ளது


sridhar
பிப் 04, 2024 10:30

ஒரே ஒரு கேள்வி கேளுங்க , உங்க நிலை என்ன என்று தெரியும் - அண்ணாமலை பற்றி உங்க கருத்து என்ன என்று கேளுங்க , போதும்.


Godyes
பிப் 04, 2024 10:15

தொகுதி மக்களுக்கு தன் தொகுதி எம்பி யாரென்றே தெரியாது. உதாரணம் தயாநிதி மாறன்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி