உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமாவளவனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

திருமாவளவனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிக அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை, தமிழக போலீசார் உஷார்படுத்துவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துவர். அச்சுறுத்தல் நீங்கினால், போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும். அந்த வகையில் தான், முன்னாள் கவர்னர் தமிழிசை, மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோருக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.திருமாவளவனின் சமீபத்திய பேச்சுக்களால், அவருக்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருக்கும் தகவல், உளவுத் துறை போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும், திருமாவளவனுக்கு தற்போது வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ethiraj
ஆக 25, 2024 10:48

Thiruma gone away from public he has enemies and protection required. Very sad


GK. Suresh
ஆக 24, 2024 15:56

Honestly my president


Stalin
ஆக 24, 2024 13:17

கட்சியில் உள்ள 50% பயலும் ஒன்னு கஞ்சா விற்பவன், கஞ்சா அடிப்பவன். இதுல புரட்சி மாதிரி பில்டப் கொடுப்பானுங்க.


ஆரூர் ரங்
ஆக 23, 2024 21:37

சரக்கு மிடுக்கு ஆட்களிடமிருந்து மற்றவர்களுக்குத்தான் பாதுகாப்பு அவசியம்.


ஆரூர் ரங்
ஆக 23, 2024 21:35

கட்சி ஆட்கள் தங்கள் மீது தலா பத்து வழக்குகளாவது வைத்திருக்க வேண்டும் எனப் பேசியவருக்கு அப்பாவி ஏழைகளின் வரிப்பணத்தில் காவல் எதற்கு?


Deltakaran
ஆக 23, 2024 21:03

கூட்டனிய விட்டு போகாமல் இருக்கத்தான் போலீஸ் பாதுகாப்பு


Sathish
ஆக 23, 2024 16:56

எங்கள் தலைவருக்கு நாங்கள் தான் துணை வாழ்க எங்கள் அண்ணன் வளர்க எங்க அண்ணன் எங்களை மீது எங்கள் அண்ணனை ஒன்றும் செய்து விட முடியாது


Karthikeyan
ஆக 23, 2024 13:32

உங்க அண்ணன் சுதந்திர போராட்ட தியாகியா என்ன? பாதுகாப்பு தருவதற்கு... கட்டுமர குடும்பத்தோட ஜால்ரா இந்த தமிழின துரோகி திருமா...அதனால பாதுகாப்பு...


SEERALAN S vasan
ஆக 24, 2024 06:43

அண்ணன் திருமா மீது சிறு தாக்குதல் என்றாலும் தமிழ்நாடே பற்றி எறியும் கோமாலி 60 லட்சம் தொண்டர்கள் உள்ள. கட்சிடா வி.சி.க ,இனி தமிழ்நாட்டில் வி.சி.க இல்லாமல் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது 2016 ல் வி.சி.க திமுகவோடு இல்லாததினால் தான் ஆட்சி அமைக்க முடியல . உண்மையான திறமையான தலைவரை அவர் இருக்கும் போது உங்களுக்கு தெரியாது.


N Sasikumar Yadhav
ஆக 23, 2024 13:10

வாயையும் செயலையும் அமைதியாக வைத்திருந்தால் எதற்கு அச்சூறுத்தல் வரபோகிறது


vijai
ஆக 23, 2024 12:38

அரச பணம் வீண் அரசியலுக்கு வந்த எல்லாத்தையும் சந்திக்கணும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி