உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

படகிலிருந்து விழுந்த மீனவர் நீரில் மூழ்கி பலி

அரியாங்குப்பம்: பலத்த காற்று வீசிய போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்தது மீனவர் பரிதபமாக இறந்தார்.புதுச்சேரி, சோலை நகர் செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 63; மீனவர். கடலுாக்கு மீன் பிடிக்க செல்வதற்காக தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்திருந்த படகில் டீசல் நிரப்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதில் அவர் படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார். உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை துாக்கி, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை