| ADDED : ஆக 06, 2024 12:05 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம், கேளம்பாக்கம்- - திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் நோக்கி சென்றது.திருப்போரூரை சேர்ந்த ஓட்டுனர் பாபு, 48, என்பவர் ஓட்டிச்சென்றார். அதே சாலையில், செங்கண்மால் பகுதி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதி சீனிவாசன் - -பிரேமலதா ஆகியோர் பைக்கில் சென்றனர்.செங்கண்மால் அருகே சென்றபோது, மேற்கண்ட ஆம்புலன்ஸ், முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.உடனே, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரேமலதா, 47, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.