உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்

மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய கார்கள்

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஏரிக்கரை மீது உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.போதிய இடவசதி இன்றி உள்ளதால், மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இந்நிலையில் நேற்று, பேருந்தில் இருந்து பயணியர் இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அவ்வழியே வந்த 'ஹோண்டா' கார், பயணியர் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.இதனால், பின்னால் வந்த ஐந்து கார்கள், ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின; அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்தால், மதுராந்தகம் ஏரிக்கரையிலிருந்து சிலாவட்டம் வரை, 5 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை