| ADDED : மார் 17, 2024 12:55 AM
மறைமலைநகர்:சென்னை, அரும்பாக்கம் அசோக் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அபிஷேக் ஆனந்த், 22. காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு அபிஷேக், தன் 'கே.டி.எம்., டியூக்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்பொத்தேரி சர்வீஸ் சாலையில், எதிரே வந்த 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அபிஷேக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.