கோவை:பிளஸ்2 படிப்புக்குப் பின், உயர்கல்வி சார்ந்த பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி, இரண்டாம் நாளாக நேற்று, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்தது. விடுமுறை நாளான நேற்று, மாணவர்கள், பெற்றோர் அலைகடல் என திரண்டு வந்து, அனைத்து கல்லுாரி அரங்குகளையும் பார்வையிட்டனர். அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை முழுமையாக தகவல்களை, அந்தந்த கல்லுாரி பிரதிநிதிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர். கருத்தரங்கு அமர்வின் காலை பொழுதில், சி.ஏ., படிப்புகளின் எதிர்காலம் குறித்து, ஐ.சி.ஏ.ஐ., நிபுணர் ராஜேந்திரகுமார், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., பேராசிரியர் விவேக் ராம்குமார், வேலைவாய்ப்புக்கான திறன்கள் குறித்து, ஜோஹோ நிறுவன அதிகாரி சார்லஸ் காட்வின் பேசினர்.மாலை அமர்வில் கேரியர் கவுன்சிலிங் குறித்து கல்வியாளர் அஸ்வின், வேளாண் படிப்புகளும் தகுதிகளும் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, மெரைன் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., பேராசிரியர் சுரேஷ்குமார் ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களும், பெற்றோரும் சந்தேகங்களை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்ச்சி இன்றே கடைசி. உங்கள் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிகாட்டும் இந்த அரிய வாய்ப்பை, தவற விடாதீர் பெற்றோரே!
'வழிகாட்டி'யில் இன்று!
'தினமலர்- வழிகாட்டி' நிகழ்வின், மூன்றாம் நாளான இன்று, கருத்தரங்கு காலை, 10:00 முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். கண்காட்சி காலை, 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, தொடர்ந்து நடைபெறும். மீடியா, அனிமேஷன், வி.எப்.எக்ஸ்., மற்றும் கேமிங் - எஸ்.எல்.சி.எஸ்., பேராசிரியர் கிஷோர்குமார் பொறியியல் படிப்புகளின் எதிர்காலம் - எஸ்.என்.ஆர்., கல்லுாரி முதல்வர் அலமேலு,நீட்., ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெற, டிப்ஸ்- கல்வியாளர் நெடுஞ்செழியன்இ.வி., மற்றும் லாஜிஸ்டிக்ஸ் - நிபுணர் செந்தில் ராஜா பேசுகின்றனர்.
l வழிகாட்டி நிகழ்வுக்கு இடையில், மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, காலை அமர்வில் கோவையை சேர்ந்த ஐஸ்வர்யா லேப்டாப் பரிசும், அனன்ட் ரிசன் டேப்லெட் பரிசும் வென்றனர். மேட்டுப்பாளையம் விகாஷினி, டி.புளியம்பட்டியை சேர்ந்த யஸ்வந்த் கண்ணன், பொள்ளாச்சி சவுந்தர்யா, ஈரோடு நிதிஷ்வரன், சூலுார் மஞ்சுளா, ஸ்மார்ட் வாட்ச் பரிசையும் தட்டிச்சென்றனர். l மாலை அமர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து, டேப்லெட் பரிசை ஊட்டியை சேர்ந்த தரணி ஸ்ரீ என்ற மாணவி வென்றார். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பிரதக்ஷனா, கோவையை சேர்ந்த அகிலேஷ் ஹரி ராகவ் ஜீவா ரித்திகா தெய்வ ஷிவானி ஆகியோர் ஸ்மார்ட் வாட்ச் பரிசை தட்டிச் சென்றனர்.