உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கிணத்துக்கடவு: நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை 19ம் தேதி நடக்கிறது. நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (19ம் தேதி) காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடக்கிறது. எனவே, நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம். இத்தகவலை, நெகமம் செயற்பொறியாளர், சங்கர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி