கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு அனைத்து மாணவர் சேர்க்கைக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு வரும் 22ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் அர்ஜூனன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு அனைத்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (இணைய வழியில்) மற்றும் புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் இனசுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் வரும் 22ம் தேதி நான்காம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.அன்று காலை 9:00 மணிக்கு பி.எஸ்சி., கணிதம் தமிழ்வழி, ஆங்கில வழி, இயற்பியல், பொது வேதியியல், கணினி அறிவியல் சுழற்சி 1, 2, புள்ளியியல், பி.எஸ்.ஏ., பயன்பாட்டியல், பி.எஸ்சி., தொழில் வேதியியல் சுழற்சி 1,2., பி.எஸ்சி., தாவரவியல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, பி.எஸ்சி., விலங்கியல் தமிழ்வழி, ஆங்கிலவழி கலந்தாய்வு நடக்கிறது.23ம் தேதி காலை 9:00 மணிக்கு பி.ஏ., பொருளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி, பி.காம்., சுழற்சி 1,2. பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல். பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் சுழற்சி, 1,2. நடக்கிறது.சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப நகல் மாற்று சான்றிதழ் அசல் மற்றும் நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் சான்றிதழ் கையொப்பம்), 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த சான்று, ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இதர சான்றிதழ்கள், போட்டோ, சான்றிதழ் அசல் மற்றும் நகல் உள்ளிட்டவகைகளை 22ம் தேதி காலை 9:00 மணிக்குள் வர வேண்டும்.