உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி

அரசு பஸ் மோதி விபத்து பொக்லைன் ஆபரேட்டர் பலி

சிதம்பரம்: சிதம்பரத்தில், பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், பொக்லைன் ஆபரேட்டர் தலைநசுங்கி இறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், முதலை மேடு திட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் தினேஷ்குமார், 23; பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, சிதம்பரத்தில் இருந்து வேலை முடிந்து, மோட்டார் பைக்கில் வீடு திரும்பினார்.சிதம்பரம் - சீர்காழி சாலையில், வைப்புச் சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது, மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் தினேஷ்குமார் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று, தினேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்