உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

 வழிகாட்டி பலகை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

வேப்பூர்: வேப்பூரில் ஊர் வழிகாட்டி பெயர் பலகையில் ஸ்டிக்கர்கள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சென்னை-திருச்சி, கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இதன் வழியே, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்துார், சேலம், பெரம்பலுார், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடலுார்-சேலம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வழியை தெரிந்து கொள்ளும் விதமாக, வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையின் இருபுறங்களிலும், ஊர் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது. கடந்தாண்டு சாலை விரிவாக்கத்தின் போது, கடலுார் மார்க்கத்தில் இருந்த பலகை அகற்றப்பட்டது. பின், பராமரிப்பு பணிகள் இல்லாததால், சேலம் மார்க்கத்தில் உள்ள வழிகாட்டி பெயர் பலகையில் ஸ்டிக்கர் சேதமடைந்துள்ளது. இதனால், கடலுார்-சேலம் சாலையில் புதியதாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் வழி தெரியாமல் அவதியடைகின்றனர். எனவே, சேதமடைந்த வழிகாட்டி பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை