உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

பாலக்கோடு: பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை அள்ளி காப்புக்காடு முனியப்பன் கோவில் பகு-தியில், ஒற்றை யானை வந்துள்ளதால், அண்-ணாமலைஅள்ளி, ஆராதஅள்ளி, கருக்கனஅள்ளி, எழுமிச்சன அள்ளி, சொன்னம்பட்டி, வாக்கன் கொட்டாய், காரிமங்கலம் கூட்ரோடு, பலமனேர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மாலை, 6:00 முதல், காலை, 7:00 மணி வரை, தேவை-யின்றி வெளியில் நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்-வதை தவிர்ப்பதுடன், குடிசை, கொட்டகை மற்றும் வீட்டிற்கு வெளியில் படுக்க வேண்டாம், யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருந்து, வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி