உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காட்சி பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கு

காட்சி பொருளாக உள்ள உயர் கோபுர மின்விளக்கு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஆவத்துவாடி பஞ்.,க்கு உட்பட்ட, சுண்டகாப்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் பஸ் ஸ்டாப் பகுதியிலுள்ள நிழற்கூடம் அருகில், கடந்த, 2021--2022ல் உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அமைத்து, அதன் மூலம் மக்கள் இரவு நேரங்களில் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பழுதான மின்விளக்குகளை அகற்றி உள்ளனர். ஆனால் மாற்றாக தற்போது வரை உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் மின்விளக்கு பொருத்தாமல் உள்ளதால், வெறுமனே காட்சி பொருளாக கம்பம் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க, அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி