உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

அரூர்: அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., அருந்ததியர் தெருவில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர்.அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பழைய வீட்டை அகற்றிவிட்டு புதிதாக தார்சு வீடு கட்ட தென்-பெண்ணை ஆற்றுக்கு செல்லும் பொதுவழிப்பா-தையை ஆக்கிரமித்து, பில்லர் அமைத்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நட-வடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர் முத்து தலை-மையில், டி.ஆண்டியூர் -அம்மாபேட்டை சாலையில், வேடகட்டமடுவு பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், வி.ஏ.ஓ., அம்பேத் ஆகியோர் ஒரு வாரகாலத்திற்குள் பொதுவழிப்-பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறு-தியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை