உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

சேதமான ரோட்டால் அவதி

பழநி பட்டத்து விநாயகர் கோயில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.---மகேஷ், பழநி

விரைவில் நடவடிக்கை

புதிய ரோடு போட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.- -ஜென்னதுல்ப்பதோஷ், நகராட்சி கவுன்சிலர், பழநி.

டூவீலர்களால் நெரிசல்

கோபால்பட்டி அய்யாபட்டி ரோட்டில் வணிக நிறுவனங்களுக்கு முன் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது.- -அரவிந்த்குமார், கோபால்பட்டி.

நடவடிக்கைக்கு ஏற்பாடு

டூவீலர்களை நிறுத்தி இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.-கந்தசாமி, ஊராட்சி தலைவர், வேம்பார்பட்டி.

இரவு பயணத்தில் ஆபத்து

அய்யலுார் காக்காயன் குளத்துப்பட்டியில் பல இடங்களில் தெரு விளக்கு இல்லாததால் இரவு பயணத்தில் ஆபத்து நிலவுகிறது. இதை சீரமைக்க வேண்டும்.- -கருப்பன், காக்காயன் குளத்துப்பட்டி.

ஆய்வுக்குப்பின் நடவடிக்கை

தேவைக்கேற்ப தெருவிளக்குகள் அமைத்து தர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.-தனலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர், அய்யலுார்.பாதியில் நிற்கும் பணிஒட்டன்சத்திரம் நகராட்சி கஸ்துாரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு அமைக்க மின்கம்பம் நடப்பட்டு பல மாதங்களாகியும் பணி முழுமையடையாமல் பாதியில் உள்ளது.- --ஸ்ரீகுமார், ஒட்டன்சத்திரம்.

விரைவில் பணிகள் முடியும்

மின்கம்ப பணிகளை விரைவில் முடித்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.- -திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்.

ரோட்டோரத்தில் குப்பை

கொடைக்கானல் வத்தலகுண்டு மெயின் ரோட்டில் உள்ள அடுக்கம் ஊராட்சியில் ரோட்டோரம் குப்பை கொட்டப்படுகிறது. தொற்று அபாயம் உள்ளது.- -சக்திவேல், அடுக்கம்.

உடனடியாக அகற்றம்

கொடைக்கானல் வத்தலகுண்டு ரோட்டில் குப்பையை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.-கண்ணன், ஊராட்சி தலைவர், அடுக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை