உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருஆவினன்குடியில் கும்பாபிஷேக யாக பூஜைகள் துவக்கம்

 திருஆவினன்குடியில் கும்பாபிஷேக யாக பூஜைகள் துவக்கம்

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் துவங்கியது. பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் டிச.8 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேற்று (டிச. 5) அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் வேள்விச் சாலையில் எழுந்தருள சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல் நடைபெற்றது. மாலை நெல்லிமர வழிபாடு நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு வேள்விச்சாலைக்கு திருக்குடங்கள் எழுந்தருள முதற்கால வேள்வி, இரவு 9:00 மணிக்கு வேள்வி நிறைவு பெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 10:45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி துவங்கி இரவு 8:30 மணிக்கு நிறைவடைகிறது. டிச.7ல் காலை 9:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி நடைபெறுகிறது. கும்பாபிஷேக நாளான டிச. 8 அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி, 6:30 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதிகளுக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி