| ADDED : நவ 16, 2025 04:07 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இறுதி போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் பயணியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி மோதிய போட்டியில் 2:-0 என்ற கோல் கணக்கில் மதுரை பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 3ம் இடத்தை திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியும், 4ம் இடத்தை சேலம் கிலேசி புரூக் அகடாமி அணியும் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு, மாவட்ட கால்பந்து கழகத்தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல், பள்ளி அதிபர் மரிவளன், தாளாளர் மரியநாதன், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கெரி இண்டேவ் விளையாட்டு தூதுவர்கள் சுகுமார், செல்வராஜ், ஷாலினி கலந்துகொண்டு கோப்பைகளை வழங்கினர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், மரிய ராஜேந்திரன், லாரன்ஸ், பிரேம் குமார் கலந்துகொண்டனர்.