உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழநி தேவஸ்தான நிர்வாகம் ரூ.30.28 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை உருண்டை வெல்லம் கொள்முதல்

பழநி தேவஸ்தான நிர்வாகம் ரூ.30.28 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை உருண்டை வெல்லம் கொள்முதல்

கோபி ;ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை, முதல் தரம் (திடம்) கிலோவில், 2,840 ரூபாய் முதல், 2,860 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,750 ரூபாய் முதல், 2,780 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 1,088 நாட்டு சர்க்கரை மூட்டை, 29.77 லட்சம் ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 34 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,500 ரூபாய் என, 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 30.28 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை