உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்

யானை தள்ளி விட்டதில் தொழிலாளி படுகாயம்

கடம்பூர், கடம்பூர் அருகேயுள்ள கரளியத்தை சேர்ந்த தொழிலாளி பெருமாள், 40; கடம்பூரிலிருந்து கரளையத்துக்கு பைக்கில் நேற்று முன்தினம் சென்றார். இருட்டிபாளையம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, தும்பிக்கையால் தள்ளி விட்டதில், பள்ளத்தில் விழுந்த பெருமாள் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியே ரோந்து சென்ற கடம்பூர் போலீசார் அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ